செய்திகள்

கடினமான நாள்களில் நான் பார்க்கும் படம் இதுதான்: சமந்தா 

நடிகை சமந்தா தனக்கு மிகவும் பிடித்த படம் குறித்து பதிவிட்டுள்ளார். 

DIN

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு  ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்த குஷி என்ற படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் குழந்தையாக இருக்கும்போது மகிழ்ச்சி அல்லது சோகமாக இருந்தாலும் சவுண்ட் ஆஃப் மியூசிக் என்ற படத்தினை மீண்டும் மீண்டும் பார்ப்பேன். எதார்த்தமான வாழ்க்கையில் இருந்து மாய உலகத்திற்கு என்னை அழைத்து செல்லும் . நான் வளரும்வரை அந்தப் படத்தினை பார்த்துக்கொண்டே இருந்தேன். சில படங்கள் காலம் தாழ்த்தி பார்க்கும்போது புதுமையாக இருக்கும். ஆனால் சவுண்ட் ஆஃப் மியூசிக் படம் எப்போது பார்த்தாலும் என்னை குழந்தைப்பருவத்துக்கு அழைத்து செல்கிறது. இங்கு வந்து நேரடியாக அந்தப் பகுதிகளை பார்க்கும்போது இன்னும் இளமையாக இருக்கிறது”எனப் பதிவிட்டுள்ளார். 

ராபர்ட் வைஸ் இயக்கிய சவுண்ட் ஆஃப் மியூசிக் 1965ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரைப்படமாகும். இந்தப்படம் 5 அகாடமி விருதுகள்  வென்ற படமென்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரை வைகோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - | MDMK | Mallai Sathya | Vaiko | Political Interview

பாமக எனது கட்சி, நான்தான் தலைவர்! அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம்! பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT