அடுத்த படமும் இவரோடுதான்: அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ்!
நடிகர் தனுஷ் தனது அடுத்த படத்தினை இயக்கும் இயக்குநர் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: வைரலாகும் சூர்யாவின் சிக்ஸ் பேக் புகைப்படம்!
Advertisement
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தனுஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டனர். அதிரடி காட்சிகளால் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் வருகிற டிச.15 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்படுள்ளது.
இதையும் படிக்க: காதலியை கரம்பிடித்தார் நடிகர் கவின்!
இந்நிலையில் இயக்குநரின் மீதான் அதீத நம்பிக்கையினால் தனது அடுத்த படமும் இவரோடுதான் என அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் தனுஷ். தனது சொந்த தயாரிப்பான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆதரவும் எதிர்ப்பும் பெறும் நடிகர் ரஜினியின் செயல்!
தனுஷ் தற்போது தனது 50வது படத்தினை இயக்குவதில் மும்முரமாக இருக்கிறார். அநேகமாக தனுஷ் 51வது படமாக இது இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.