ரத்தமாரே ரத்தமாரே...: விக்னேஷ் சிவன் பகிர்ந்த குடும்ப புகைப்படங்கள்!
இயக்குநர் விக்னேஷ் சிவன் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்ப புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். பின்பு தானா சேர்ந்த கூட்டம், நானும் ரெளடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கினார்.
இது தவிர தயாரிப்பு, பாடலாசிரியர் என பலமுகங்கள் விக்னேஷ் சிவனுக்கு உண்டு. அஜித்தை வைத்து இயக்கவிருந்த திரைப்படம் பாதியில் நின்று போன நிலையில், அடுத்த திரைப்படம் குறித்த தகவலை விக்னேஷ் சிவன் இதுவரை வெளியிடவில்லை.
இதையும் படிக்க: என்னிடம் இதுவரை யாரும் காதலை கூறியதே இல்லை: நடிகை ஸ்ரீ லீலா வருத்தம்!
Advertisement
Advertisement
இதையும் படிக்க: புராரி மரணம்: காவல்துறை அதிகாரியாக தமன்னா!
இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர்.
இதையும் படிக்க: குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டிய அஜித்தின் வைரல் விடியோ!
இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்ப புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில் ரத்தமாரே என்ற பாடலை பதிவில் இணைத்துள்ளார். இந்தப் பாடல் ஜெயிலர் படத்திற்காக விக்னேஷ் சிவன் எழுதியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.