சூர்யா நடிப்பில் ‘காக்க காக்க 2’?
’காக்க காக்க’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
’காக்க காக்க’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து அவர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: அஜித்துடன் இணையும் சந்தானம்?
இந்நிலையில், கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற ‘காக்க காக்க’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்படத்தின் இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் சூர்யாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.