ஆர்ஆர்ஆர் - 2 உருவாக்க திட்டம்!
ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ராஜமௌலி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் அல்லுரி சீதா ராமராஜூ (ராம் சரண்), கொமரம் பீம்(ஜூனியர் என்டிஆர்) என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து உருவாக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளது.
இப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இதையும் படிக்க: தமன்னாவுக்கு சர்வதேச திரைப்பட விழா விருது
Advertisement
Advertisement
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ராஜமௌலியின் தந்தையும் ஆர்ஆர்ஆர் பட திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத், ‘ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார்கள். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் 2-ம் பாகத்திலும் நடிப்பார்கள். முன்னணி ஹாலிவுட் பட நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ராஜமௌலி அல்லது அவரின் மேற்பார்வையில் வேறு இயக்குநர் இயக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.