FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மகேஷ் பாபுவின் டெவில்: அனிமல் பட புரமோஷனில் ரகசியம் பகிர்ந்த இயக்குநர்! 

அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, பிரபல நடிகர் மகேஷ் பாபுவிடம் கதை சொல்லியிருப்பதாக கூறியுள்ளார். 

Updated On : 27 நவம்பர் 2023, 6:14 pm IST
பகிர்:

அர்ஜுன் ரெட்டி எனும் தெலுங்கு படத்தினை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. இந்தப்படம் தமிழ், ஹிந்தியில் ரீமெக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.  

இந்த இயக்குநரின் அனிமல் படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இதில் ராஷ்மிகா 'கீதாஞ்சலி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநரின் சொந்தத்  தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - அமித் ராய். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் மாஸ்டராக கலக்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

பிரபல சன்னி தியோலின் சகோதரான பாபி தியோல் படத்தின் வில்லனாக நடித்துள்ளார். சூர்யாவின் கங்குவா படத்திலும் பாபி தியோல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ஹைதராபாத்தில் இன்று நடந்த புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநரிடம் மகேஷ் பாபு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சந்தீப் ரெட்டி வங்கா, “நான் முதலில் மகேஷ் பாபுவிடம் ஒரு கதை கூறினேன். அதற்கு டெவில் என்று பெயர். அதில்  அனிமல் படத்தினைவிட வன்முறை அதிகம் இருக்கும். ஆனால் அந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் அவருக்கு பிடிக்காததால் அது நடைபெறவில்லை” எனக் கூறினார்.  

இதனனால் சமூக வலைதளங்களில் டெவில் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments