முகப்பு
செய்திகள்

எதிர்நீச்சல் ஒளிபரப்பு நேரம் மாற்றம்! பிக் பாஸ் -7 காரணமா?

அதிக பார்வையாளர்களைக் கொண்ட தொடராக எதிநீச்சல் இருந்து வருகிறது.

Updated On : 3 அக்டோபர் 2023, 6:19 pm IST
பகிர்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட தொடராக எதிநீச்சல் இருந்து வருகிறது எனலாம். வயது வித்தியாசமின்றி அனைத்துவிதமான ரசிகர்களையும் எதிர்நீச்சல் தொடர் ரசிகர்களாகக் கொண்டுள்ளது. 

குடும்பப் பெண்களை மட்டுமின்றி இளைய தலைமுறையைச் சேர்ந்த பலரும் எதிர்நீச்சல் தொடரை பார்த்துவருகின்றனர். இதன் விளைவாக சின்னத்திரை தொடர்களின் டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து எதிர்நீச்சல் தொடர் முதலிடத்தில் நீடித்து வருகிறது. 

Advertisement

Advertisement

இத்தொடரின் தூணாக இருக்கும் பல பாத்திரங்களில் ஒன்று ஆதி குணசேகரன் பாத்திரம். இந்தப் பாத்திரத்தில் நடித்துவந்த மாரிமுத்து கடந்த மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து இந்த பாத்திரத்தில் அடுத்து நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

மாரிமுத்து மறைவுக்கு பிறகு எதிர்நீச்சல் தொடரின் டிஆர்பி குறையும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால், தொடர்ந்து தற்போதும் எதிர்நீச்சல் தொடர் முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில், எதிர்நீச்சல் ஒளிபரப்பு நேரம் அரைமணி நேரம் முன்னதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த நிலையில், இனி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் அனைத்து நாள்களிலும் எதிர்நீச்சல் ஒளிபரப்பாகிறது. 

இரவு 9.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் -7 நிகழ்ச்சி ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments