இயக்குநர் ஜெயதேவி காலமானார்!
நடிகையும் இயக்குநருமாக அறியப்பட்ட ஜெயதேவி உடல் நலக்குறைவால் காலமானார்.
இதயமலர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானாவர் ஜெயதேவி. தொடர்ந்து, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அதன்பின், மற்றவை நேரில் என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நலம் நலமறிய ஆவல், விலாங்குமீன், விலங்கு, பாசம் ஒரு வேஷம், பெண்களின் சக்தி உள்ளிட்ட படங்களை இயக்கினார். தயாரிப்பாளராகவும் இருந்தவர் இறுதியாக நடிகைகள் குஷ்பு, சுஹாசினியை வைத்து ஆனந்த லீலை என்கிற படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் வெளியாகவில்லை.
இதையும் படிக்க: லியோ டிரைலர்.. சம்பவம் உறுதி: அனிருத்
Advertisement
Advertisement
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயதேவி(65) நேற்று காலமானார். இவர் இயக்குநர் வேலு பிராகரனைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்துப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.