திரையரங்குகளில் இனி டிரைலர் வெளியீடு கிடையாது!
இனி திரையரங்குகளில் டிரைலரை வெளியிடப்போவதில்லை என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக நட்சத்திர நடிகர்களின் திரைப்பட டிரைலர்களையும் பல திரையரங்குகள் வெளியிட்டு வருகின்றன. ரூ.10 முதல் ரூ.50 வரை இதற்குக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இறுதியாக, நடிகர் விஜய்யின் லியோ டிரைலர் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அப்போது, சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் லியோ டிரைலரைக் காண வந்த ரசிகர்கள் உற்சாகத்தில் 400க்கும் மேற்பட்ட இருக்கைகளை சேதப்படுத்தினர். இதனால், அந்தத் திரையரங்க நிர்வாகம் கடுமையான பொருளாதார இழப்பைச் சந்தித்தது.
இதையும் படிக்க: ஒரே மாதத்தில் சிக்ஸ் பேக்.. என்ன செய்தார் ஹிருத்திக் ரோஷன்?
Advertisement
Advertisement
இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், இனி திரையரங்கங்களில் படத்தின் டிரைலர்களை வெளியிடப்போவதில்லை என முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.