தனி ஒருவன் கதை பிரபல தெலுங்கு நடிகருக்காக ஆரம்பிக்கப்பட்டது: இயக்குநர் மோகன் ராஜா
இயக்குநர் மோகன் ராஜா நேர்காணல் ஒன்றில் தனி ஒருவன் படத்தின் கதை பிரபல தெலுங்கு நடிகருக்காக ஆரம்பிக்கப்பட்டதென கூறியுள்ளார்.
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் உருவானப் படம் தனி ஒருவன். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், கனேஷ் வெங்கட் ராமன், தம்பி ராமையா, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
இதையும் படிக்க: ஜவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய் குறித்து பேசிய காட்சிகள் நீக்கப்பட்டது ஏன்?: ரசிகர்கள் கொந்தளிப்பு!
ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் தனி ஒருவன் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்தது. அன்றைய நாளில் தனி ஒருவன் படத்தின் 2ஆம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
Advertisement
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மோகன் ராஜா, “தெலுங்கு நடிகர் பிரபாஸ் என்னிடம் கதை கேட்டிருந்தார். அவருக்காக வைத்திருந்த ஐடியாதான் தனி ஒருவன். ஆனால் அவர் அந்த சமயத்தில் காதல் படங்களில் நடிப்பதாக இருந்தது. எனக்கும் விஜய்யுடன் வேலாயுதம் படம் இருந்ததால் பின்னர் பிரபாஸுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை. அந்த கதையைதான் பெரிதாக்கி தனி ஒருவன் படமாக்கினேன்” எனக் கூறியிருந்தார்.
தனி ஒருவன் 2 படப்பிடிப்பு 2024இல் தொடங்குமென சமீபத்தில் அறிவிப்பு விடியோ வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.