ரோமன்சம் படத்துக்கும் ஆவேஷம் படத்துக்கும் சம்பந்தமுண்டு: நடிகர் செம்பன் வினோத்
நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்கும் புதிய படம் குறித்து நடிகர் செம்பன் வினோத் சுவாரசிய தகவல் கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற மலையாளப்படம் ரோமன்சம். பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருக்கும் ஒரு வீட்டில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களே ரோமன்சம். பேய் வரவழைக்கும் ஓஜா போர்ட் விளையாடு அவர்களை எங்கு கொண்டு செல்கிறது என ஜாலியாக எடுக்கப்பட்ட த்ரில்லர் படம். மலையாளம் மட்டுமல்ல தமிழிலும் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
பிரபல மலையாள நடிகர் சௌபின் ஷாகிர், அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் ஜிது மாதவன் இயக்கியிருந்தார். இதில் செம்பன் வினோத் சயீத் எனும் கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிக்க: ஜவான்: தமிழ், ஹிந்தி வெளியீட்டில் இந்த வித்தியாசத்தைக் கவனித்தீர்களா?
Advertisement
Advertisement
விக்ரம், மாமன்னன் வெற்றிக்குப் பிறகு ஃபக்த் ஃபாசில் தமிழில் மிகவும் பிரபலமான நடிகராக அறியப்பட்டு வருகிறார். மலையாளத்தில் சிறப்பான படங்களை தேர்வு செய்து நடிக்கும் ஃபகத் தமி, தெலுங்கில் வில்லனாக நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: 77வது சதமடித்த விராட் கோலி!
தற்போது ரோமன்சம் இயக்குநர் ஜிது மாதவான் ஆவேஷம் எனும் படத்தினை இயக்கியுள்ளார். இதில் ரோமன்சம் பட செம்பன் வினோத் நடித்த் சயீத் எனும் கதாபாத்திரத்திலட்தான் ஃபகத் ஃபாசில் நடிக்கிறார்.
இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி, கே.எல்.ராகுலின் புதிய சாதனைகள்!
இது குறித்து செம்பன் வினோத், “சயீத் கதாபத்திரத்தினை மையப்படுத்தி ஆவேஷம் படம் இருக்கும். இயக்குநரின் கல்லூரியில் நிகழ்ந்த கதையாக இப்படம் இருக்கும்” எனக் கூறியுள்ளார். ரோமன்சம் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் தமிழில் லோகேஷ் கனகராஜ் படமான விக்ரம் படத்தில் நடித்திருந்தார். ஜனவரி 2024இல் ஆவேஷம் படம் வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.