முகப்பு
செய்திகள்

பெண்களின் முன்னேற்றத்துக்காக ‘ஆதி சக்தி’: நடிகை சம்யுக்தா அறிவிப்பு!

பிரபல நடிகை சம்யுக்தா பெண்களின் முன்னேற்றதுக்காக ஆதி சக்தி எனும் புதிய அமைப்பினை துவங்கியுள்ளார்.

Updated On : 17 ஏப்ரல் 2024, 6:21 pm IST
பகிர்:

நடிகை சம்யுக்தா மலையாளத்தில் தீவண்டி, லில்லி, கடுவா, தெலுங்கில் பீம்லா நாயக் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் களரி படத்தில் அறிமுகமாயிருந்தார். 

நடிகர் தனுஷ் உடன் நடித்த வாத்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

வாத்தி படத்தில் நடிகை சம்யுக்தா மிகவும் கவனம் பெற்றார். தெலுங்கில் இவர் நடித்த விரூபாக்‌ஷா விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement

இந்நிலையில் ராம நவமியை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகை சம்யுக்தா.

அந்தப் பதிவில் நடிகை சம்யுக்தா , “புனிதமான ராம நவமி நாளில் நாம் அனைவரும் ஆழமான நன்றியுணர்வுடன் ஒன்றிணைகிறோம். இந்த ஆதி சக்தி பிறந்த நாளில் பெண்களின் முன்னேற்றதுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான முயற்சியாக இதைத் தொடங்குகிறேன். இது மேலும் சிறக்க உங்களது ஆதரவினையும் ஆசிர்வாதத்தினையும் வேண்டுகிறேன்.

இந்தப் புனிதமான பயணம் குறித்த கூடுதல் தவலை விரைவில் பகிர்வேன்" எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments