முகப்பு
செய்திகள்

சந்தோஷ் நாராயணன் குரலில் வெளியானது ‘ஏழு கடல் ஏழு மலை’ பட பாடல்!

இயக்குநர் ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் 2ஆவது பாடல் வெளியாகியுள்ளது.

Updated On : 5 ஜூலை, 2024 at 1:28 PM
நடிகை அஞ்சலி.
பகிர்:

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.

இயக்குநர் ராம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். மாநாடு படத்துக்கு பிறகு இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் ரொமேனியா நாட்டின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது.

Advertisement

தனித்துவமான காட்சி அமைப்பினால் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் அதிநவீன சினிமாக்களைக் கொண்டாடும் ‘நோ லிமிட்’ எனும் பிரிவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ தேர்வாகி உள்ளது. பல சர்வதேச திரைப்படங்களில் தேர்வாகிவரும் இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் 2ஆவது பாடல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணனில் குரலில் யுவன் இசையில் மதன் கார்கி வரிகளில் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments