மமிதா பைஜூவைச் சூழ்ந்த ரசிகர்களால் பரபரப்பு!
சென்னையில் நடிகை மமிதா பைஜூவைச் சூழ்ந்த ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வரதன், விக்ருதி, சூப்பர் சரண்யா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை மமிதா பைஜூ. மலையாளியான இவருக்கு தென்னிந்தியளவில் பெரும் புகழைப் பெற்றுத்தந்த திரைப்படம் பிரேமலு. இப்படத்தின் நாயகியாக நடித்து அசத்தியவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
முக்கியமாக, தமிழில் பல தயாரிப்பாளர்கள் மமிதாவை ஒப்பந்தம் செய்யும் முயற்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் கடை திறப்பு விழாவிற்கு வந்த மமிதாவை ரசிகர்கள் சூழ்ந்து தற்படம் (செல்ஃபி) எடுக்க முயன்றதுடன் மமிதாவின் பெயரைச் சொல்லி ஆரவாரம் செய்தனர்.
நட்சத்திர நடிகைகளுக்கு இணையான வரவேற்பு மமிதாவுக்குக் கிடைத்தாலும் சிறிது நேரம் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ரசிகர்களிடமிருந்து மமிதாவை ஒருங்கிணைப்பாளர்கள் பாதுகாத்து அழைத்துச் செல்லும் விடியோ வைரலாகி வருகிறது.