வெளிநாட்டில் ‘டாக்ஸிக்’ படப்பிடிப்பு!
பிரபல கன்னட நடிகர் யஷ், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்பு அப்டேட்.
கேஜிஎஃப், கேஜிஎஃப் - 2 படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யஷ். உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
தொடர்ந்து, யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடிக்கிறார். டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
நடிகர் யஷ்ஷும் இணை தயாரிப்பாளராக களமிறங்குகிறார். இயக்குநர் கீது கோகன்தாஸ் லையர்ஸ் டைஸ், மூத்தோன் படங்களை இயக்கி பாராட்டுக்களைப் பெற்றவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீது, தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் டின்னு என்கிற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
இந்நிலையில் பிரிட்டனில் 150- 200 நாள்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீக்கி பிளைண்டர்ஸ் படத்தினைப் போல இந்தப் படம் உருவாவதாகவும் நயன்தாரா யஷ்ஷுன் சகோதரியாகவும் கியாரா அத்வானி நாயகியாகவும் ஹூமா குரேஷி வில்லியாகவும் நடிக்கவிருக்கிறார்கள்.
இந்தப்படம் 2025ஆம் ஆண்டு ஏப்.10இல் வெளியாகவுள்ளது. கேஜிஎஃப் 2 படத்தின் 3ஆவது வருடத்தின் வெளியீட்டு நாளில் இதனை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். தற்போது இந்தியாவில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் ஆங்கில ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.