முகப்பு
செய்திகள்

‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? கமல்ஹாசன் விளக்கம்!

நாக் அஸ்வின் இயக்கியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Updated On : 20 ஜூன் 2024, 12:47 pm IST
பகிர்:

பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் 'கல்கி 2898ஏடி'.

பிரபாஸுடன் கமல்ஹாசனும், அமிதாப் பச்சனும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜூன் 27-ஆம் தேதி 'கல்கி 2898 ஏடி' திரைக்கு வரவிருக்கிறது.

Advertisement

இந்தப் படத்தில் கமல் நடிக்க ஒப்புகொண்டது குறித்து பலருக்கும் ஆச்சரியம் இருந்தது. இது குறித்து நேற்று (ஜூன் 19) நடந்த முன் வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் பேசியதாவது:

நான் எப்போதும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதில் ஆர்வம் உள்ளவன். நாயகன் காதல் பாடல் பாடிக்கொண்டு நாயகிக்காக காத்திருக்கும்போது வில்லன்தான் படத்துக்கு நன்மை செய்வான். வில்லன் தனக்கு பிடித்ததை எல்லாம் செய்வான். கல்கியில் நான் அதைதான் செய்திருக்கிறேன். மகிழ்ச்சியாக இருந்தது.

இயக்குநர் நாக் அஸ்வினை பாராட்ட வேண்டும். சாதாரண மனிதர்கள்தான் அசாதரணமான செயல்களை செய்வார்கள். இயக்குநர் கே.பாலசந்தரை எடுத்துக்கொள்ளுங்கள் அவர் பார்க்க அரசு அதிகாரி மாதிரி இருப்பார். ஆனால் அவர் அற்புதமான படங்களை இயக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.