செய்திகள்

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

நடிகை ஈஷா ரெப்பா பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம் எனக் கூறியுள்ளார்.

DIN

ஆந்திரத்தைச் சேர்ந்த நடிகை ஈஷா ரெப்பா 2012இல் தெலுங்கில் நாயகியாக அறிமுகமானார். இதுவரை 17 திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஓய், நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி பாதையை அமைத்துள்ளார் ஈஷா ரெப்பா. 2018இல் வெளியான ஏவ் படத்தில் தன்பாலின ஈர்பாளராக நடித்து அசத்தினார்.

தற்போது ஈஷா ரெப்பா தருண் பாஸ்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே எனும் படத்தின் தெலுங்கு ரீமெக்கில் நடித்து வருகிறார்.

விபின் தாஸ் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான ஃபாசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பில் உருவான மலையாள திரைப்படமான ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ மாபெரும் வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் ஈஷா ரெப்பா பங்கேற்று பேசியிருந்தார். அதில் அவர் பேசியதாவது:

நல்ல இயக்குநர்கள் நல்ல படங்களை இயக்குவார்கள். தருண் பாஸ்கர் இயக்குநர் நன்றாக நடிக்ககூடியவர். அவரது கீடா கோலா படத்தில் நன்றாகவே நடித்திருந்தார். நான் எப்போதும் படத்தின் கதையை வைத்துதான் அதில் நடிக்கலாமா வேண்டாமா எனத் தேர்வு செய்கிறேன்; பணத்தை வைத்து அல்ல. தற்போது ராஜமுந்திரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கடுமையான வெப்பநிலையில் ஆந்திராவின் காரசாரமான உணவுகளை உண்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT