முகப்பு
செய்திகள்

சவுக்கடியுடன் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறும் ஈரானிய இயக்குநர்!

பிரபல ஈரான் இயக்குநர் முகமது ரசூலோஃப்புக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 மே 2024, 4:33 pm IST
- படம்: கேன்ஸ் பட விழாவில் முகமது ரசூலோஃப் / எக்ஸ்
பகிர்:

முகமது ரசூலோஃப் எனும் பிரபல ஈரானிய இயக்குநரின் தி ட்விலைட், அயர்ன் ஐஸ்லேண்ட், குட் ஃபாய், மனுஸ்கிரிப்ட் டோன்ட் பர்ன், ஏ மேன் ஆஃப் இன்டக்ரிடி ஆகிய படங்கள் உலகளவில் கவனம் பெற்றன.

52 வயதான முகமது ரசூலோஃப்பின் தி சீட் ஆஃப் சேக்ரட் ஃபிக் அடுத்த வாரம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருந்தது. ஏற்கனவே பல படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாக்களில் விருதுகளை பெற்றுள்ளன.

இந்நிலையில் இவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவரது வழக்கறிஞர் தனது எக்ஸ் பக்கத்தில், “தி சீட் ஆஃப் சேக்ரட் ஃபிக் எனும் படத்தினை உரிய அனுமதியின்றி எடுத்திருக்கிறார்; நடிகைகள் சரியாக ஹிஜாப் அணியவில்லை, ஹிஜாப் அணியாமலும் படமாக்கப்பட்டுள்ளதாக வழக்கு பதிவிடப்பட்டுள்ளது.

Advertisement

படக்குழுவின் முக்கியமான நபர்கள் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

- படம்: கேன்ஸ் திரைப்பட விழா இணையதளம்

இதற்கு முன்னதாகவும் முகமது ரசூலோஃப் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 2010, 2017, 2020 என பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏ மேன் ஆஃப் இன்டக்ரிடி படம் தங்கப்பனை விருது வென்றது. ஈரானில் விதிக்கப்படும் மரணதண்டனை குறித்தான தேர் இஸ் நோ எவில் எனும் படம் தங்கக் கரடி விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு பிரபல இயக்குநர் ஜாபர் பனாஹியின் சிறைத்தண்டனை கடந்த 2023 பிப்ரவரியில் முடிவடைந்தது. அதன்பிறகு 14 வருடங்களுக்குப் பிறகு அவர் ஈரானை விட்டு வெளியே சென்றதும் குறிப்பிடத்தக்கது.

ஜாபர் பனாஹி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.