முகப்பு
நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி.
செய்திகள்

ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே சமரச பேச்சுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி...

செய்திகள்

ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே சமரச பேச்சுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி...

Updated On : 15 நவம்பர், 2024 at 7:11 AM
நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி.
பகிர்:

நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

செப். 9ஆம் தேதி தன் மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில், சென்னை நீதிமன்றத்தில் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மனுவும் அளித்துள்ளார்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு ஜெயம் ரவியின் முடிவானது கலந்து ஆலோசிக்காமல் அவரே தன்னிச்சையாக எடுத்தது என்று ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்

இந்த நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், திருமணப் பதிவை ரத்து செய்யக் கோரிய ஜெயம் ரவியின் மனு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையை தொடர்ந்து, இருவரிடையே இன்றே சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

இதனிடையே, பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவிக்கு தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவிய நிலையில், அதனை ஜெயம் ரவி திட்டவட்டமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →