நடிகர் தனுஷ்  கோப்புப்படம்
செய்திகள்

சென்னை நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் ஆஜர்!

விவாகரத்து வழக்கில் நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

DIN

சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்.

தனுஷ்-ஐஸ்வா்யா திருமணம் 2004-ஆம் ஆண்டு நவ. 18-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். சுமாா் 20 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னா், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனா்.

2022-ஆம் ஆண்டு இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டனா். தனுஷ் மற்றும் ஜஸ்வா்யா இடையே உள்ள பிரச்னையை தீா்க்க அவா்களுடைய குடும்பத்தினா் மற்றும் நண்பா்கள் ஈடுபட்டனா். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதில் 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி இருந்தனர்.

ஆனால், நேரில் விசாரணைக்கு ஆஜராக மூன்று முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பிய நிலையில், இருவரும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது, நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் நீதிபதி முன்பு நேரில் ஆஜராகினர்.

இருவரிடமும் விசாரணை நடத்திய நீதிபதி, நவம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியா - உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு: வெள்ளை மாளிகை

மேட்டூர் அணை 5-ஆவது முறையாக நிரம்பியது!

மேட்டூர் அணை நிலவரம்!

ஹிமாசலில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள்!

திருப்பனந்தாள் மடத்தின் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் முக்தியடைந்தார்

SCROLL FOR NEXT