நம் ஒற்றுமைக்கு நோக்கம் உண்டு... ஜெய்...! அரசியல் திட்டத்தில் தனுஷ்?
நடிகர் தனுஷின் பேச்சு இணையத்தில் வைரலாகியுள்ளது...
நடிகர் தனுஷ் தன் ரசிகர்களிடம் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, லப்பர் பந்து இயக்குநர் இயக்கத்திலும் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் தமிழ் முருகன் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். மேலும், பல திரைப்பட இயக்குநர்கள் தனுஷுக்குக் கதை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தன் பிறந்த நாளை (ஜூலை 28) முன்னிட்டு தனுஷ்நேற்று (ஜூலை 26) நலத்திட்ட உதவிகளைச் செய்தார். நிகழ்வில் தன் ரசிகர்களிடம் பேசிய நடிகர் தனுஷ், “இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். நம் ஒற்றுமைக்குப் பெரிய சக்தி உண்டு. அதற்கு நோக்கமும் உண்டு. சும்மா வந்தோம், என்னைச் சந்தித்தோம், புகைப்படம் எடுத்தோம் என மட்டும் இருக்கக் கூடாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சிக்கல்களில் இருந்தால் உதவுங்கள். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்யுங்கள். அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும். நீங்கள் அதனைச் செய்வீர்கள் என நம்புகிறேன். என்னை இன்னும் வேகமாக ஓட வைக்கும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி... ஓம் நமச்சிவாய... ஜெ..!” எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
தன் ரசிகர் மன்றத்திற்கு நோக்கமும் ஒற்றுமையும் இருப்பதாகத் தனுஷ் கூறியுள்ளது அவர் அரசியல் வருவதற்கான பேச்சு போல் தெரிகிறது என ரசிகர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றன.
Actor Dhanush's speech to his fans is going viral on social media.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.