அனிருத், ஜூனியர் என்டிஆர்  
செய்திகள்

இந்தியாவின் அடுத்த ஏஆர் ரஹ்மான் அனிருத்..! ஜூனியர் என்டிஆர் புகழாரம்!

நடிகர் ஜூனியர் என்டிஆர் அனிருத்தை இந்தியாவின் அடுத்த ஏஆர். ரஹ்மான் எனப் புகழ்ந்து பேசியுள்ளார்.

DIN

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது, ஜூனியர் என்டிஆர் தனது 30வது படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர் கொரடால சிவா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ‘தேவரா -1’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ளார். தேவரா செப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ஜூனியர் என்டிஆர் அனிருத் பற்றி பேசியதாவது:

எனக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும். அனிருத்தின் திறமை மிகவும் அற்புதமானது. மெல்லிசை பாடல் வேண்டுமென்றால் வேற லெவலில் தருகிறார். நாயகனை உயர்த்திப்பிடிக்க வேண்டிய பாடல் என்றாலும் நடனாமாட பாடல் வேண்டுமானலும் தருகிறார்.

திறமையில்லாவிட்டால் இவ்வளவு சூப்பர் ஹிட் பாடல்களை அனிருத்தால் தரமுடிந்திருக்காது. இந்தியாவில் இன்று அதிகமாக அவரது இசையை விரும்புகிறார்கள்.

தென்னிந்தியாவில் இளையராஜா சார், கீரவாணி சார், ரஹ்மான் சார் என பலர் சிறப்பான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். தற்போது, அனிருத் இந்த இடத்தைப் பிடித்துவிட்டார். அவரிடம் அதிகமான திறமைகள் இருக்கின்றன.

அனிருத் மெதுவாக இந்தியாவின் ஏ.ஆர்.ரஹ்மானாக மாறிவருகிறார். அத்தான் நான் நினைப்பதும். நீங்கள் தேவரா படத்தின் பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். அவரது இதயத்தையும் ஆன்மாவையும் கொண்டு இசையமைத்துள்ளார். பின்னணி இசைக்காக காத்திருக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT