முகப்பு
செய்திகள்

சூர்யா 44 படப்பிடிப்பை நிறைவு செய்த பூஜா ஹெக்டே!

நடிகர் சூர்யாவின் 4ஆவது படத்தின் படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே நிறைவு செய்துள்ளார்.

Updated On : 25 செப்டம்பர் 2024, 4:11 pm IST
பூஜா ஹெக்டே - படம்: எக்ஸ் / பூஜா ஹெக்டே
பகிர்:

தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட்டில் பலரின் மனதில் இடம் பிடித்தார். 

இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார். 

அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  இதேபோன்று பாலிவுட்டிலும் ’மொஹஞ்சதாரோ', ‘சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்திருந்தார்.

Advertisement

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்துவந்தார்.

இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜ்ஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இதன் படப்பிடிப்புக்காக பூஜா ஹெக்டே அந்தமானில் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தனக்கான படப்பிடிப்பு முடிவடைந்ததை பூஜா ஹெக்டே அறிவித்துள்ளார். இதற்காக படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளதை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.