முகப்பு
செய்திகள்

ஈரமான ரோஜாவே நினைவிருக்கா? நீண்ட நாள்களுக்குப் பிறகு நடந்த சந்திப்பு!

ஈரமான ரோஜாவே -2 தொடரில் நடித்த நடிகர்கள் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒன்றாக சந்தித்துள்ளனர். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:23 PM
பகிர்:

ஈரமான ரோஜாவே -2 தொடரில் நடித்த நடிகர்கள் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒன்றாக சந்தித்துள்ளனர். 

ஈரமான ரோஜாவே தொடர் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, அதில் முதன்மை பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் ஒன்றாக சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். 

சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தக் குழு மீண்டும் இணைந்து புதிய தொடரில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

ஸ்வாதி - கெபிரியல்லா

ஈரமான ரோஜாவே தொடரில் திரவியம் ராஜகுமரன் - ஸ்வாதி, சித்தார்த் - கெபிரியல்லா ஜோடிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த ஜோடிகளுக்கு இடையேயான காதல் காட்சிகளும் செல்லமாக நடக்கும் சண்டைக் காட்சிகளும் இன்றளவும் சமூக வலைதளங்களில் விடியோக்களாக வலம்வருகின்றன. அந்த அளவுக்கு ஈரமான ரோஜாவே தொடருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

சித்தார்த் - கெபிரியல்லா / திரவியம் ராஜகுமரன் - ஸ்வாதி

இந்தத் தொடர் கடந்த ஆண்டு இறுதியில் இறுதிக்கட்டத்தை எட்டியது. பெரும் வரவேற்புடன் நிறைவு செய்யப்பட்டது. இத்தொடரில் நடித்த ஸ்வாதி, தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை ஸ்வாதி

இந்நிலையில், ஈரமான ரோஜாவே தொடரில் முதன்மை பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் ஒன்றுகூடி சந்தித்துள்ளனர். நடிகர்கள் திரவியம், சித்தார்த், ஸ்வாதி , கெபிரியல்லா, ஷ்ரவந்திகா ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் சந்தித்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →