முகப்பு
செய்திகள்

திரைப்பட விழாவில் பங்கேற்பதால் இது தீவிரமான படமில்லை: இயக்குநர் ராம்

ஏழு கடல் ஏழு மலை படம் குறித்து படக்குழுவினர் பகிர்ந்த சுவாரசிய தகவல்..

Updated On : 31 ஜனவரி 2024, 9:11 pm IST
பகிர்:

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.

காதலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று வருகிறது. 

இந்நிலையில் இன்று ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றது குறித்து படக்குழுவினர் ஜாலியாக பேசியது வைரலாகி வருகிறது. 

படம் குறித்து இயக்குநர் ராம், “திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவதால் இந்தப் படம் சீரியஸான (தீவிரமான ) படமில்லை. முழுக்க முழ்க்க கமர்ஷியல் படம்தான். நம்பிக்கை இல்லையென்றால் இவர்களே (சூரி, நிவின்பாலி, அஞ்சலி) சாட்சி. படம் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகும்” எனக் கூறினார். 

இயக்குநர் ராம் பேசும்போது அஞ்சலி, “ஆமாம், இது கமர்ஷியல் கமர்ஷியல் கமர்ஷியல் படம்” என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.