செய்திகள்

துருவ நட்சத்திரம் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறேன்: விக்ரம்

துருவ நட்சத்திரம் குறித்து விக்ரம்...

DIN

நடிகர் விக்ரம் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி, 8 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகாமல் இருக்கும் படம் துருவ நட்சத்திரம். ஆக்சன், திரில்லர் பாணியில் உருவான இப்படம், தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட நிதி பிரச்னையால் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது.

இந்த நிலையில், வீர தீர சூரன் திரையரங்க விசிட்டின் போது ரசிகர்கள் துருவ நட்சத்திரம் படத்திற்காகக் காத்திருப்பதாக நடிகர் விக்ரமிடம் சொன்னபோது, ‘நானும்தான்’ என பதிலளித்திருக்கிறார்.

மேலும், படம் எப்போது வெளியாகும் எனக் கேட்டதற்கு, ‘கௌதம் மேனனிடம் கேட்டுச் சொல்கிறேன்’ என விக்ரம் கூறியுள்ளார்.

பார்த்திபன், விநாயகன், சிம்ரன், ராதிகா, ரிது வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தை இந்தாண்டு மே மாதம் திரைக்குக் கொண்டு வர கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1,751 கிலோ தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்: 7 போ் கைது

வாக்கு திருட்டு வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம்: தேவேந்தா் யாதவ் உறுதி

நூதன மோசடி: நூஹ் பகுதியைச் சோ்ந்த ஒருவா் கைது

போதைப்பொருள் வழக்கில் தென்னாப்பிரிக்க நாட்டவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

மழைவெள்ள நீரில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்தினரை சந்தித்த ஆம் ஆத்மி குழு!

SCROLL FOR NEXT