செய்திகள்

டிமான்டி காலனி - 3 அப்டேட்!

டிமான்டி காலனி - 3 படத்தின் அப்டேட்....

இணையதளச் செய்திப் பிரிவு

டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.

விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல்ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான டிமான்டி காலனி 2 திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகி வணிக ரீதியாக ரூ. 80 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது.

தற்போது, இப்படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இந்த நிலையில், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை (ஜன. 1) காலை 11.11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன? நிர்மல் குமார் விளக்கம்

2026, ஜனவரி மாதம் வங்கிகளுக்கு எத்தனை நாள்கள் விடுமுறை?

தமிழகத்தில் ஜன.4 வரை பனிமூட்டம் தொடரும்!

உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் 9-ஆவது முறையாக தங்கம் வென்ற கார்ல்சென்!

ஒரே நாளில் நிறைவடையும் இரு தொடர்கள்!

SCROLL FOR NEXT