FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சாய் தன்ஷிகாவைத்தான் திருமணம் செய்வேன்: விஷால்

நடிகர் சங்கக் கட்டட திறப்பு விழா ஆக. 15; விஷாலின் பிறந்தநாள் ஆக. 29 - அன்றே விஷால் - சாய் தன்ஷிகா திருமணம்.

Updated On : 19 மே 2025, 10:11 pm IST
பகிர்:

நடிகை சாய் தன்ஷிகாவைத்தான் திருமணம் செய்வேன் என நடிகர் விஷால் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

யோகிடா பட விழாவில், விஷாலை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும், ஆக. 29ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகவும் சாய் தன்ஷிகா தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய விஷால் தங்கள் திருமணத்துக்கு அனைவருக்கு அழைப்பு விடுத்தார்.

Advertisement

Advertisement

அப்போது விஷால் பேசியதாவது,

''சாய் தன்ஷிகாவின் அப்பாவுடைய அனுமதியுடன் இதனைக் கூறுகிறேன். யோகிடா பட விழாவில் என் சொந்த விஷயங்களை பேசக் கூடாது. இந்தாலும் கூறுகிறேன். என்னுடைய உயிர் சாய் தன்ஷிகா இங்கு இருக்கிறார். என் குடும்பம் சார்பாக நான் இதனைக் கூறுகிறேன். ஆமாம், நான் தன்ஷிகாவை முழுமையாகக் காதலிக்கிறேன். அவரையேதான் திருமணம் செய்யவுள்ளேன்.

உங்கள் எல்லோருக்கும் அழைப்பு வரும். எல்லோரும் எங்களை வாழ்த்த வேண்டும். எங்களை நடிகர்களாக நீங்கள் திரையில் பார்ப்பீர்கள். ஆனால், தம்பதியாக நாங்கள் இருவரும் உங்களை சந்திக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். விரைவில் அழைப்பு வரும்.

இந்த மேடையை எனக்கு அமைத்துக் கொடுத்த செந்தில் சாருக்கு நன்றி. இதனை நான் மீண்டும் சொல்லிதான் ஆகனும். நான் சாய் தன்ஷிகாவை காதலிக்கிறேன். அவரை நான் நன்றாகப் பார்த்துக்கொள்வேன்'' எனக் குறிப்பிட்டார்.

சாய் தன்ஷிகாவுடன் விஷால் - படம் - எக்ஸ்

நடிகர் சங்கக் கட்டட திறப்பு விழா ஆக. 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஷாலின் பிறந்தநாள் ஆக. 29ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அந்த நாளில் விஷாலும் - சாய் தன்ஷிகாவும் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்.

இதையும் படிக்க | விஷால் உடன் திருமணம்! தேதியை அறிவித்தார் சாய் தன்ஷிகா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments