FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் தலைமறைவு!

பாலிவுட் நடிகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வருகிறார்...

Updated On : 24 மே 2025, 9:20 pm IST
அஜாஸ் கான்
பகிர்:

பிரபல பாலிவுட் நடிகர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது.

தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் பிரபலமடைந்த பாலிவுட் நடிகரான அஜாஸ் கான் பிக்பாஸ் - 7 நிகழ்ச்சியில் பங்குபெற்று கவனம் ஈர்த்தார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் இவர் மீது நடிகை ஒருவர், அஜாஸ் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையிடம் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட மும்பை காவல்துறையினர் அஜாஸ் கானைத் தொடர்புகொள்ள முயற்சித்தனர்.

Advertisement

Advertisement

அதற்குள் தன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டதால் மும்பை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அஜாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், வழக்கின் தீவிரம் கருதி நீதிபதி ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளார். இதற்கிடையே, அஜாஸ் கான் தலைமறைவாகிட்டாராம். தற்போது, மும்பை காவல்துறை அஜாஸ் கானைத் தேடும் பணிகளில் இறங்கியுள்ளனர்.

அண்மை காலமாக பாலிவுட் திரைத்துறையினர் பாலியல் வழக்குகளில் சிக்குவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments