நடிகர் ஹரிஷ் கல்யாண் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு டீசல் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. அதனால், அடுத்த படத்தைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் ஹரிஷ் கல்யாண் ஒப்பந்தமானதாகக் கூறப்படுகிறது. இது இரண்டு நாயகர்களின் கதையாக உருவாகவுள்ளதாம்.
தலைவன் தலைவி திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்ததால் இயக்குநர் பாண்டிராஜ் மீண்டும் தன் மார்க்கெட்டை பிடித்துள்ளார்.
தற்போது, ஹரிஷ் கல்யாணுடனான திரைப்படத் தகவலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: அஜித்துக்கு வில்லனாகும் பிரபலம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.