1068 எபிசோடுகளுடன் முடிவடைந்த மாரி தொடர்!
மாரி தொடர் முடிவடைந்தது தொடர்பாக...
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மாரி தொடர், 1068 எபிசோடுகளுடன் முடிவடைந்தது.
மாரி தொடரில் நாயகியாக அஞ்சனா ஸ்ரீநிவாஸனும், நாயகனாக சுகேஷும் நடித்து வந்தனர்.
மூடநம்பிக்கைகளை மையப்படுத்தியும் அமானுஷ்ய காட்சிகள் கொண்ட திரைக்கதையுடனும் மாரி தொடர் எடுக்கப்பட்டு வந்ததால், இந்தத் தொடருக்கு மக்கள் மத்தியிலும் சிறுவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.
Advertisement
Advertisement
மாரி தொடரின் முதல் பாகம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்து, இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வந்தது.
இந்த நிலையில், இந்தத் தொடரின் பரபரப்பான இறுதிக்கட்ட கிளைமேக்ஸ் காட்சிகள் கடந்த வார இறுதியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, 1068 எபிசோடுகளுடன் முடிவடைந்தது.
மாரி தொடர் ஒளிபரப்பாகி வந்த மாலை 6 மணிக்கு, தற்போது கெட்டி மேளம் தொடர் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மகளே என் மருமகளே தொடரில் இணைந்த சிறகடிக்க ஆசை நடிகர்!
The Maari series, which aired on Zee Tamil, ended with 1068 episodes.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.