இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் இறுதியாக வெளியான காதலுக்கு நேரமில்லை திரைப்படம் கவனம் பெற்றிருந்தது. நவீன காதலைப் பேசிய படம் என விமர்சன ரீதியாகவும் பாராட்டுகள் கிடைத்தன.
இப்படத்தைத் தொடர்ந்து, கிருத்திகாவின் புதிய படம் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து கிருத்திகா தன் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: அட்டகாசமான வரவேற்பு... டீயஸ் ஈரே வசூல் இவ்வளவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.