மாரி செல்வராஜ் 
செய்திகள்

சாராயம் குடிச்ச மாதிரி ஆடாதீங்க... ரசிகர்களைக் கண்டித்த மாரி செல்வராஜ்!

திருநெல்வேலியில் பேசிய மாரி செல்வராஜ்....

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் மாரி செல்வராஜ் ரசிகர்களைக் கண்டித்தது பலரிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

நடிகர் துருவ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

மேலும், இப்படம் ரூ. 18 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் புரோமோஷனுக்காக படக்குழுவினருடன் திருநெல்வேலியிலுள்ள பிரபல திரையரங்கிற்கு மாரி செல்வராஜ் சென்றிருந்தார்.

படம் பார்த்த ரசிகர்களைச் சந்திக்கும்போது சில இளைஞர்கள் கூச்சல் போட்டபடியே இருந்தனர். இதைக் கண்டு கோபமான மாரி செல்வராஜ், “சாராயம் குடித்தது மாதிரி ஆடாதீர்கள். நான் உங்களுக்கு சாராயத்தைக் கொடுக்கவில்லை. புத்தகத்தைத்தான் கொடுத்தேன். என் படத்தைப் புத்தகமாகப் பாருங்கள். என்னை அண்ணன் என அழைப்பவர்கள் எல்லாரும் எனக்குத் தம்பிகள்தான். உங்கள் மீது எனக்கு பெரிய அக்கறை இருக்கிறது. அதேபோல், நீங்களும் பிறரை நேசிக்கவும் அடுத்தவரைத் துன்புறுத்தாமலும் வாழ வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன் பலரும் மாரி செல்வராஜுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

mari selvaraj spokes in tirunelveli theatre visit

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமூக ஊடக விழிப்புணா்வு போட்டிகளில் வென்ற 40 பேருக்கு பரிசு : அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

புதூரில் ரூ. 3.44 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

ஜன.28-இல் கும்பாபிஷேகம்! தான்தோன்றிமலை பெருமாள் கோயில் கோபுர கலசத்தில் நவதானியங்கள் வைப்பு

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: விமான சேவை முழுமையாக ரத்து

விவசாயிகளின் தேவைக்கு போதுமான அளவில் உரங்கள் கையிருப்பு! - கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

SCROLL FOR NEXT