முதல்வரானால் கிருத்தி ஷெட்டியின் முதல் கையெழுத்து இதுதானாம்!
கிருத்தி ஷெட்டியின் முதல்வர் கையெழுத்து குறித்து....
நடிகை கிருத்தி ஷெட்டி மாநில முதல்வரானால் தன் முதல் கையெழுத்து குறித்து பேசியுள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் கிருத்தி ஷெட்டி. தெலுங்கில் நல்ல மார்க்கெட் வைத்திருந்தாலும் தமிழில் நல்ல வாய்ப்புகள் அமையவில்லை.
கார்த்தியுடன் நடித்த வா வாத்தியார் தோல்விப்படமானது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்த எல்ஐகே திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட கிருத்தி ஷெட்டியிடம் நீங்கள் முதல்வரானால் உங்களின் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்? எனக் கேட்கப்பட்டது.
அதற்கு கிருத்தி ஷெட்டி, “நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு போதுமான தண்டனைகள் இல்லை என நினைக்கிறேன். அதனால், சில கடுமையான தண்டைகளைக் கொண்டு வருவேன். நான் முதல்வரானால் இந்த மாதிரியான விஷயங்களுக்குத்தான் என் முதல் கையெழுத்து இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Actress Kriti Shetty has spoken about what her first official signature would be if she were to become the State Chief Minister.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.