ஹொம்பலேவின் அடுத்த அவதாரம் அறிவிப்பு!
ஹொம்பலே பிலிம்ஸ் வெளியிட்ட புதிய அப்டேட்...
மகா அவதார் நரசிம்மா திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்த அவதாரத்திற்கான அறிவிப்பை ஹொம்பலே நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அனிமேஷன் திரைப்படமாக உருவான மகாவதாரம் நரசிம்மா இந்தியளவில் மிகப்பெரிய கவனம் பெற்றது.
இந்த அனிமேஷன் படத்தை அஸ்வின் குமார் இயக்கியிருந்தார். அனிமேஷனில் வரும் காட்சிகளின் தரம் கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இருந்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கக்கூடிய படமாக வரவேற்பைப் பெற்றதுடன் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.
Advertisement
இந்த நிலையில், 10 அவராதங்களில் இரண்டாவது அவதாரத்திற்கான அறிவிப்பு நாளை (ஏப். 19) காலை 11.22 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பாகத்திற்கும் சாம் சிஎஸ் இசையமைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.