FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நிறைவடையும் ஹரிகா சாதுவின் மணமகளே வா தொடர்!

ஹரிகா சாதுவின் மணமகளே வா தொடர் நிறைவடையவுள்ளது குறித்து...

Updated On : 19 ஏப்ரல் 2026, 3:03 pm IST
மணமகளே வா தொடர் - படம்: யூடியூப்
பகிர்:

நடிகை ஹரிகா சாது பிரதான நடிக்கும் மணமகளே வா தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் முக்கியத்துவம் பெறா (non prime) நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்ப்பதற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர்.

வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் உள்ளிட்ட பலரும் மதிய நேர தொடர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

திருமகள் தொடரில் நாயகியாக நடித்த ஹரிகா சாது நடிக்கும் தொடரான மணமகளே வா தொடர், கடந்த 2024 ஜூலை 15 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக் கிழமை வரை பிற்பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மணமகளே வா தொடரானது, 500 நாள்களைக் கடந்துள்ளது.

இந்தத் தொடரில், விக்கி ரோஷன் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்தத் தொடரில் லோகேஷ் பாஸ்கர், லட்சுமி, ஜெயந்தி நாராயணன், சுவேதா, அணு, டேவிட் ராஜா, நிரஞ்சனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், மணமகளே வா தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகவும், அதற்கான படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மணமகளே வா தொடரின் பரபரப்பான கிளைமேக்ஸ் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தொடருக்குப் பதிலாக, புதிதாக ஒளிபரப்பாகவுள்ள தொடர் குறித்தும், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

summary

It has been reported that the series Manamagale Vaa, starring actress Harika Sadu in the lead role, is set to conclude soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments