கதாநாயகனாகும் சாய் அபயங்கர்?
சாய் அபயங்கர் குறித்து....
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சினிமாவில் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.
தமிழில் வளர்ந்துவரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையில் 6 திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில், கருப்பு திரைப்படம் மே வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.
மேலும், தற்போது இயக்குநர் அட்லியின் ராக்கா, தனுஷின் டி55 இசைப்பணிகளையும் கவனித்து வருகிறார்.
Advertisement
சில நாள்களுக்கு முன் பவழ மல்லி எனப்பெயரிட்ட தன் 5-வது இசை ஆல்பத்தை வெளியிட்டார். இதில், ஜோடியாக கயாடு லோஹர் நடிக்க, ஷ்ருதி ஹாசனுடன் இணைந்து சாய் பாடியிருந்தார்.
இப்பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் 10 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. திரையிசையிலும் ஆல்பம் பாடல்களிலும் சாய் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருவது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாய் அபயங்கருக்கான இசை உரிமம் ரூ. 10 கோடி வரை விற்பனையாவதால் தன் சம்பளத்தை ரூ. 8 கோடி வரை உயர்த்த முடிவு செய்துள்ளாராம். இந்த நிலையில், ஏஜிஎஸ் தயாரிப்பில் சாய் நடிக்கவுள்ளார் என்கிற தகவல் பரவி வந்தது. ஆனால், இதனை சாய் அபயங்கர் மறுத்ததுடன் நடிப்பில் ஆர்வமில்லை என்றும் அந்தத் திறமை எனக்கில்லை என்றும் கூறியுள்ளார்.