FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த வாமிகா கபி!

நடிகை வாமிகா கபியைக் கொண்டாடும் தமிழ் ரசிகர்கள்...

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 3:09 pm IST
நடிகை வாமிகா கபி
பகிர்:

தமிழ்நாட்டில் நடிகை வாமிகா கபிக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை வாமிகா கபி. தமிழில் மாலை நேரத்து மயக்கம் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சில ஆண்டுகளுக்கு முன் மார்டன் லவ் சென்னை தொடரில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய நினைவோ ஒரு பறவையிலும் நடித்திருந்தார்.

தற்போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இவர் நடித்த டிசி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப்படமாகியுள்ளது. வணிக ரீதியாக ரூ. 100 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வசூல் வெற்றியைத் தாண்டி விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றதுடன் நடிகை வாமிகா கபிக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்துள்ளது. டிசியில் சந்திரா என்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்ததாக வாமிகாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும், இந்த வரவேற்பால் நடிகை வாமிகா கபியும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். இதனால், டிசி படப்பிடிப்புப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ”முதல் முறை சந்திரா என் வாழ்க்கையை மாற்றிய போது, என்னைத் தவிர வேறு யாருக்கும் அது தெரியாது.
இரண்டாவது முறை, உலகமே அவளை அறிந்தது.

திரைப்படத்தில் தாஸ் சந்திராவை மீட்டு அவளின் சுதந்திரத்தைக் கொடுத்து உண்மையில் அவள் யார் என்பதை கண்டுபிடிக்க வைத்தார். எங்கோ இந்தப் பயணத்தில், சந்திராவாவும் எனக்கு அதையேதான் செய்தாள். நான் இதுவரை சந்திக்காத என்னை மீட்டதுடன் நான் எதுவாக முடியும் என்பதையும் காட்டினாள்” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Wamiqa Gabbi has gained more fans in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments