மகாநதி தொடரில் திடீர் திருப்பம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
மகாநதி தொடரின் கதையில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருப்பது தொடர்பாக...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர் கதையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தத் தொடரை, தொடர்ந்து பார்க்கும் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 2023 ஜனவரி முதல் மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார்.
டிஆர்பியில் முன்னணியில் உள்ள இந்தத் தொடர், விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
Advertisement
Advertisement
இத்தொடரின் பிரதான பாத்திரத்தில் லஷ்மிபிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்
அதிலும், இத்தொடரில் நடிக்கும் விஜய் - காவேரிக்கு (லஷ்மிபிரியா - சுவாமிநாதன்) இணைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களுக்கு சமூக ஊடங்களில் தனிப்பட்ட பக்கங்களை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதனிடையே, மகாநதி தொடரின் கதையின்படி விஜய் - காவேரி ஜோடிக்கு குழந்தைப் பிறந்துள்ளது.
இந்த நிலையில், மகாநதி தொடரின் கதையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் காட்சிகளை, முன்னோட்ட விடியோவாக தொடர் குழு வெளியிட்டுள்ளது.
மகாநதி தொடரின்ன் கதையானது 5 ஆண்டுக்கு முன்னோக்கி சென்றுள்ளது. திடீரென்று கதையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கதையின்படி கனவாக இருக்குமோ அல்லது தொடர் நிறைவடைகிறதா என்று ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
There has been a sudden twist in the story of the Mahanadi series airing on Vijay TV.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.