மகாநதி தொடரின் 2ஆம் பாகம் வேண்டும்! ரசிகர்கள் கோரிக்கை!
மகாநதி தொடரின் 2ஆம் பாகம் எடுக்க வேண்டும் என்று இயக்குநருக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருப்பது தொடர்பாக...
மகாநதி தொடரின் 2ஆம் பாகம் எடுக்க வேண்டும் என்று இயக்குநர் பிரவீன் பென்னட்டுக்கு, ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரின், படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.
மகாநதி தொடரின் கிளைமேக்ஸ் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
Advertisement
Advertisement
கடைசிநாள் படப்பிடிப்பின்போது நடைபெற்ற நிகழ்ச்சியில், இதில் நடித்த அனைத்து நடிகர்களும் பங்கேற்றனர். கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் ருத்ர பிரவீன், ஸ்வேதா குமார், லஷ்மி பிரியா, சுவாமிநாதன் ஆகியோர் மகாநதி தொடர் மூலம் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்தத் தொடரில் நடிக்கும் லஷ்மி பிரியா, சுவாமிநாதன் இணைக்கு சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களின் பாத்திரங்களின் பெயர்களை வைத்து விகா(விஜய், காவேரி) என்ற பக்கங்களையும் ரசிகர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தத் தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் மகாநதி தொடரின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட வேண்டும் என்று இயக்குநர் பிரவீன் பென்னட்டுக்கு சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Fans are requesting director Praveen Bennett on social media to make a second part of the Mahanadhi series.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.