நடிகை ரம்பா மீண்டும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகைகள் அறிமுகமாகி கவனம் பெற்றிருந்தாலும் இன்றும், ‘சார் ரம்பா சார்...’ என்கிற ஆச்சரியம் குறையவில்லை.
90-களின் துவக்கத்தில் தெலுங்கில் அறிமுகமான ரம்பா, தமிழில் உள்ளத்தை அள்ளித்தா படமும் மூலம் நாயகியாகி முதல் படத்திலேயே பெரிதாகக் கவனிக்கப்பட்டார்.
தொடர்ந்து, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றியைக் கொடுத்து தமிழ் சினிமாவில் அழகான நாயகியாக வலம் வந்தார்.
தமிழ், தெலுங்கு என 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ரம்பா, திருமணத்திற்குப் பின் நடிப்பிலிருந்து விலகினார். இந்த நிலையில், ரம்பா மீண்டும் சினிமாவில் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.