புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!
பாக்கியலட்சுமி தொடரின் மூலம் புகழ் பெற்ற பாக்கியா - கோபி இணை மீண்டும் புதிய தொடரில் இணையவுள்ளது குறித்து...
பாக்கியலட்சுமி தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற பாக்கியா - கோபி இணை மீண்டும் புதிய தொடரில் இணைந்து நடிக்கவுள்ளனர்.
இந்தத் தொடருக்கு ஆதலால் காதல் செய்வீர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், மூன்று குழந்தைகளுக்கு பெற்றோராக பாக்கியாவும் கோபியும் நடிக்கவுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவாக கே.எஸ். சுசித்ராவும், கோபியாக சதீஷ் குமாரும் நடித்தனர். இந்த ஜோடி சின்ன திரை ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
Advertisement
திருமண வயதில் பிள்ளைகள் இருக்கும்போதும், மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டு அதன் பிறகு குடும்பத்தில் சந்திக்கும் சவால்களை கோபி தனது நடிப்பின் மூலம் தத்ரூபமாகக் காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார்.
மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற பாக்கியலட்சுமி தொடர், 5 ஆண்டுககளுக்கும் மேலாக 1,469 எபிஸோடுகள் வரை ஒளிபரப்பாகி சாதனை படைத்தது. இந்த ஜோடி தற்போது புதிய தொடரில் இணைந்து நடிக்கவுள்ளனர். அதுவும் முதன்மை பாத்திரத்தில் இருவரும் நடிக்கவுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள அந்த புதிய தொடருக்கு ஆதலால் காதல் செய்வீர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மூன்று குழந்தைகளுக்கு பெற்றோராக இருவரும் நடிக்கின்றனர்.
பாக்கியலட்சுமி தொடருக்குப் பிறகு கே.எஸ். சுசித்ராவும் சதீஷ்குமாரும் இணைந்து நடிக்கவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.