தெலுங்குப் படத்துக்கு மட்டும் புரமோஷன் ஏன்? நயன்தாராவை விமர்சிக்கும் ரசிகர்கள்!
நடிகை நயன்தாராவின் தெலுங்குப் பட புரமோஷன் குறித்து...
நடிகை நயன்தாராவின் தெலுங்குப் பட புரமோஷன் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நயன்தாரா ‘ மன ஷங்கர வரபிரசாத காரு’ எனும் தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார்.
ஷைன் ஸ்கீரின்ஸ் அன்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார்.
Advertisement
Advertisement
பொங்கலை முன்னிட்டு இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஜன.12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கான புரமோஷனில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
தமிழில் புரமோஷன்களில் நடிக்காமல் இருக்கும் இவர் ஏன் தெலுங்குப் படங்களில் மட்டுமே நடிக்கிறார் என சிலரும் அது அவரது தனிப்பட்ட விருப்பமென சிலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
நடிகர் அஜித்தும் தனது படங்களின் புரமோஷனில் கலந்துகொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Nayanthara's Telugu film promotion has become a topic of discussion on social media.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.