பராசக்தி திரைப்படத்தில் ரவி மோகன் நடித்தது குறித்து கெனிஷா பேசியுள்ளார்.
சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இதில், வில்லனாக நடிகர் ரவி மோகனும் முக்கிய கதாபாத்திரங்களில் அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், பாடகி கெனிஷா, “ஹீரோவாக நடித்தாலும் வில்லனாக நடித்தாலும் ரவி மோகனால்தான் பராசக்தி திரைப்படம் ஓடும். வேறு யாரும் என் கண்களுக்குத் தெரியவில்லை.
அவர்தான் இப்படத்தில் நம்பர்.1... இப்படத்திற்காக 6 மாதங்கள் கடுமையாக உழைத்தார். முதல்பாகத்தில் பெரிதாக இல்லையென்றாலும் இரண்டாம் பாகத்தில் அவரைத்தாண்டி எதுவும் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.