சூர்யா, தனுஷ், கார்த்தி, விஜே சித்து..! 2026-ன் முன்னணி படங்களைக் கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்!
2026 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள முன்னணி படங்களின் ஓடிடி உரிமம் குறித்து...
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களின் நடிப்பில் 2026 ஆம் ஆண்டில் வெளியாகும் திரைப்படங்களின் உரிமத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா, தனுஷ், கார்த்தி, ரவி மோகன், அதர்வா ஆகியோரது திரைப்படங்கள் நிகழாண்டில் (2026) திரையரங்குகளில் வெளியாகவுள்ளன.
இப்படங்கள் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த வரிசையில், பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் சூர்யாவின் 46 ஆவது திரைப்படம் மற்றும் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 55 ஆவது திரைப்படம் ஆகிய படங்களின் ஓடிடி உரிமங்களை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதேபோல், இயக்குநர் தமிழ் - நடிகர் கார்த்தி கூட்டணியின் “மார்ஷல்”, நடிகர் விஷ்ணு விஷால் - இயக்குநர் செல்லாவு அய்யாவு கூட்டணியின் “கட்டா குஸ்தி -2”, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடிக்கும் “இதயம் முரளி” ஆகிய திரைப்படங்களின் ஓடிடி உரிமங்களையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், பிரபல யூடியூபர் விஜே சித்து இயக்கி நாயகனாக நடிக்கும் “டயங்கரம்”, நடிகர் ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ”ஆன் ஆர்டினரி மேன்” மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந் நாயகனாக அறிமுகமாகும் “வித் லவ்” ஆகிய படங்களும் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Netflix acquired the rights to films starring leading actors of the Tamil film industry that are scheduled for release in 2026.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.