என்னை நம்புங்கள்... அப்டேட் கொடுத்த அட்லி!
அட்லி திரைப்படம் குறித்து...
இயக்குநர் அட்லி தன் புதிய திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பான் இந்திய வெற்றிப்படமானதால், பாலிவுட்டில் அட்லிக்கு வாய்ப்புகள் அதிகரிக்கத் துவங்கின. இதனால், மும்பையிலேயே குடியேறியுள்ளார்.
தற்போது, நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படத்தை ரூ. 600 கோடி பட்ஜெட்டில் இயக்கி வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படம் குறித்த கேள்விக்கு, “அல்லு அர்ஜுனுடனான திரைப்படம் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை கண்டடைகிறது. இப்படத்தின் மீது எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது எனப் புரிகிறது. என்னை நம்புங்கள், நிச்சயம் மிகச் சிறந்ததை அனுபவிப்பீர்கள்.
தீபிகா படுகோனுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளேன். என்னுடைய அதிர்ஷ்டம் அவர். தாயான பின் அவர் நடிக்கும் முதல் திரைப்படம் என்பதால் வித்தியாசமான தீபிகாவைப் பார்ப்பீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
atlee about his movie with allu arjun
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.