இந்தியாவில் வெளியானது கிறிஸ்டோஃபர் நோலனின் ’தி ஒடிசி’!
கிறிஸ்டோஃபர் நோலனின் ’தி ஒடிசி’ வெளியானது பற்றி...
நாடு முழுவதும் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் உருவான தி ஒடிசி திரைப்படம் காலை 9 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது.
கிரேக்கக் கவிஞர் ஹோமர் எழுதிய இரண்டு பெரும் புனைவுகள் இலியட், ஒடிசி. இரண்டுமே கிரேக்கப் பேரரசுகளை உள்ளடக்கிய மாய எதார்த்த பாணி கதைகளாக உருவாகின.
இதில், தி ஒடிசியை உலகின் மிகச்சிறந்த இயக்குநராக கருதப்படும் கிறிஸ்டோஃபர் நோலன் அதே பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் சுமார் 23,000 திரையரங்குகளில் ஜூலை 17 ஆம் தேதி (இன்று) வெளியாகிறது.
Advertisement
Advertisement
இந்தியா முழுவதும் ஐமேக்ஸ் திரையரங்குகளில் இன்று காலை 9 மணியிலிருந்து தி ஒடிசி திரையிடப்பட்டு வருகின்றது.
ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கு பெரும் வரவேற்பு காணப்படும் நிலையில், இந்தியாவிலும் பல கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Christopher Nolan's 'The Odyssey' released in India!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.