கிராம வாழ்க்கைக்குத் திரும்பும் விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனின் பேச்சு கவனம் பெற்றுள்ளது...
நடிகர் விஜய் ஆண்டனி கிராம வாழ்க்கைக்குத் திரும்ப உள்ளதாகக் கூறியுள்ளார்.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இயக்குநர் சசி இயக்கத்தில் நூறு சாமி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஜய் ஆண்டனியும் நடிகை ஸ்வாசிகாவும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தின் டீசர் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜய் ஆண்டனி, “கிராம வாழ்க்கையே சிறந்தது. நகரத்தில் பலரும் மன அழுத்தத்துடன்தான் வாழ்ந்து வருகின்றனர். நான் 3 ஆண்டுகள் கழித்து பொள்ளாச்சி பக்கம் கிராம வாழ்க்கையை வாழ திட்டமிட்டுள்ளேன். அதற்காக நிலத்தை வாங்குவதற்கான முயற்சியில் இருக்கிறேன்” எனக் கூறினார். நூறு சாமி திரைப்படம் கிராம வாழ்க்கையைத் தழுவி உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Actor Vijay Antony has stated that he is going to return to village life.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.