ஜன நாயகன் இணையத்தில் கசிந்தபோது சிவகார்த்திகேயன் ஆதரவாக இருந்தார்: தயாரிப்பாளர்
தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார்...
கேவிஎன் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நடிகர் சிவகார்த்திகேயன் தங்களுக்கு ஆதரவாக இருந்ததைக் கூறியுள்ளார்.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் நாளை (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியாகிறது. பல பகுதிகளிலும் டிக்கெட் முன்பதிவுகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படம் சில மாதங்களுக்கு முன் இணையத்தில் கசிந்தாலும் டிக்கெட் விற்பனைகளைப் பார்த்தால் பெரிய தொகையை வசூலிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஜன நாயகன் தயாரிப்பாளர் கேவிஎன் புரடக்ஷன்ஸின் நிறுவனர் வெங்கட் நாராயணாவிடம், “ஜன நாயகன் இணையத்தில் கசிந்த போது, யாரெல்லாம் உங்களுக்கு ஆதரவளித்தார்கள்?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு வெங்கட் நாராயணா, “நடிகர் சிவகார்த்திகேயன் ஆதரவாக இருந்தார். நேரடியாகவே என்னைப் பெங்களூருவில் சந்தித்து என்ன ஆனது என்பதைக் கேட்டறிந்தார். மேலும், பல தமிழ் சினிமா பிரபலங்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
KVN producer Venkat Ramana has stated that actor Sivakarthikeyan supported them.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.