முகப்பு
செய்திகள்

நங்கூரமிட்டு சுடர்விடும் கலங்கரை விளக்கம்! - பாரதிராஜா மறைவுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இரங்கல்!

இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இரங்கல் தெரிவித்துள்ளார்...

Updated On : 10 ஜூன் 2026, 7:32 pm IST
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இரங்கல்... - Instagram/Hiphop Tamizha
பகிர்:

இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் இமயம் என திரையுலகினரால் அழைக்கப்படும் இயக்குநர் பாரதிராஜா புதன்கிழமை (ஜூன் 10) அதிகாலை உடல்நலக் குறைவால் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

இதையடுத்து, நீலாங்கரை வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி இரங்கல் தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

“தமிழ் சினிமா எனும் ஆழ்கடலில் தனி ஆளாய் எதிர்நீச்சலிட்டு கரை கண்ட இமயம்; காலமெனும் முடிவிலியில் தன் படைப்புகளால் நங்கூரமிட்டு என்றும் சுடர்விடும் கலங்கரை விளக்கம் - பாரதிராஜா!

தமிழ் சினிமா உள்ளவரை என்றென்றும் நீங்கள் நினைவுக்கூரப்படுவீர்கள் ஐயா! “ எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தேனியில் நாளை நடைபெறவுள்ள பாரதிராஜாவின் இறுதிச்சடங்கிற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Music composer Hiphop Tamizha Adhi has expressed his condolences over the passing of director Bharathiraja.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.